என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் உயிரிழப்பு"
- கொத்து புரோட்டா, சிக்கன் ரைஸ், ஆம்லெட் ஆகியவற்றை பார்சலாக வீட்டிற்கு வாங்கி சென்றனர்.
- கொத்து புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்தோடு:
ஈரோடு ஆர்.என்.புதூர் மரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (24). இவர் கங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பூவிழி (24).
சம்பவத்தன்று வார விடுமுறை என்பதால் சுரேந்தர் தனது மனைவியுடன் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு வந்தார். பின்னர் மாலை மீண்டும் மரவபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர்கள் ஆர்.என்.புதூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர்.
அங்கு கொத்து புரோட்டா, சிக்கன் ரைஸ், ஆம்லெட் ஆகியவற்றை பார்சலாக வீட்டிற்கு வாங்கி சென்றனர்.
வீட்டிற்கு சென்ற பின்னர் ஓட்டலில் இருந்து வாங்கி வந்த கொத்து புரோட்டாவை சுரேந்தர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். திடீரென இரவு 11.30 மணி அளவில் சுரேந்தர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
இதையடுத்து அவரது மனைவி பக்கத்து வீட்டை சேர்ந்த தினேஷ் என்ற நபருடன் மோட்டார் சைக்கிளில் சுரேந்தரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது செல்லும் வழியிலேயே சுரேந்தர் மயங்கி விழுந்தார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சுரேந்தரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறி அழுதார்.
கொத்து புரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீரென இறந்தது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுரேந்தர் கொத்து புரோட்டா, சிக்கன் ரைஸ், ஆம்லெட் வாங்கிய ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். கொத்து புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஸ்ரீராம் உறவினர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து குரு நாராயணன் உயிரிழந்தார்.
போரூர்:
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் ஸ்ரீராம்(25). வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக சிறுநீரக கல்அடைப்பு பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்த ஸ்ரீராம் திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தார்.
மற்றொரு சம்பவம்...
மதுரவாயல் கந்தசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் குரு நாராயணன் (33). சினிமா துறையில் வேலை பார்த்து வந்தார். இவர் சொந்த ஊரான கடலூர் சென்றுவிட்டு இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை திரும்பினார். பின்னர் அவர், நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டே வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து குரு நாராயணன் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் பீகாரை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
- மசூப் ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் பீகாரை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மாலை வடமாநில ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டு இருந்தபோது திடீரென 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் பீகாரை சேர்ந்த மசூப் (வயது 34), நதின் (28), சானபாக் (18) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மசூப் ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் இறந்தார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்